Thursday, 7 July 2016

பண்புமலர்  

கருணை உள்ளம்

மதுரையைச் சேர;ந்த கிருஷ்ணன் கேட்டரிங் டெக்னாலஜியில் தங்கப் பதக்கம் பெற்று பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்;. படிப்பில் திறமையான கிருஷ்ணனுக்கு நல்ல சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை கிடைத்தது. சந்தோஷமாக வெளிநாடு செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவர பார்த்த காட்சி அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மதுரை நகர வீதியில் அவர் கண்ட காட்சி, உணவு எது? மனிதக் கழிவு எது? என்று கூடத் தெரியாமல் அனைத்தையும் சேர்த்து உண்ணுகின்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர். பதறினார் கிருஷ்ணன். அவருக்கு நல்ல உணவு வாங்கிக் கொடுத்தார். ஆவலுடன் அதை வாங்கி உண்டார்; மனநோயாளி. கிருஷ்ணன் மனதில் ஆழ்ந்த கவலை அடைந்தார்;. இதே போல் மனநிலை பாதிக்கப்பட்ட அதிகம் பேர்; சாலையோரம் இருந்தனர். உடனே முடிவெடுத்தார். தனது வெளிநாட்டுப் பயணத்தை தவிர்த்துவிட்டார். தனது வாழ்நாளை மனநலம் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக அர்ப்பணம் செய்ய முடிவெடுத்தார். தனது தாயிடம் தனது முடிவினை கூறினார். 
தாயும் சந்தோஷத்தில், “நீ அவர்களைப் பார்த்துக் கொண்டால் நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்.” என்றார். கிருஷ்ணன் மகிழ்ந்தார்;. இதற்காக அக்ஷயா டிரஸ்ட் உருவாக்கினார்;. வண்டி ஒன்று வாங்கினார்;. தினமும் தானே வீட்டில் உணவைத் தயாரித்து பொட்டலங்கள் கட்டினார்;. பொட்டலங்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு மன நோயாளிகள் இருக்கும் இடம் தேடி அவர்களுக்கு உணவு வழங்கினார்;. இது போல மதுரை நகரெங்கும் வண்டி சுற்றியது. தினமும் மனநோயாளிகளுக்கு உணவு வழங்கப் படுகின்றன. இச்செயல் இன்றும் மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தினமும் அக்ஷயா டிரஸ்ட் வேன் மதுரையில் 120 கி.மீ. வரை பயணம் செய்து இந்த அரிய செயலைச் செய்து கொண்டிருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக தனது வாழ்;க்கையையே தர முன்வந்தது கிருஷ்ணனின் கருணை உள்ளம்.


No comments:

Post a Comment